சமீபத்தில் விண்கல் ஒன்று பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லவுள்ளதாக அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. 15 முதல் 30 மீட்டர் அளவுள்ள விண்கல் பூமியிலிருத்து 26,000 மைல் தொலைவில் கடந்து செல்லுவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இந்த விண்கல்லுக்கு 2012 TC 4 விண்கல் என பெயர்சூட்டப்பட்டுள்ளது. இந்த புதிய 2012 TC 4 விண்கல்லால் பூமிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இன்னும் 100 ஆண்டுகளுக்கு விண்கல்லால் பூமிக்கு ஆபத்து ஏற்படாது எனவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.