இரண்டு கடலாக காட்சியளிக்கும் மெரினா

chennai flood

கடலா கரையா என்று தெரியாத அளவிற்கு மெரினா கடற்கரை முழுவதும் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றது. வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவது கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல இடங்களில் இன்றும் கனமழை கொட்டி தீர்க்கின்றது. நேற்று பிற்பகல் துவங்கி இரவு முழுவதும் மழை கொட்டி தீர்க்கின்றது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

chennai flood

இதனால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்துக்கு பாதிப்பு அடைந்துள்ளது. சில பகுதிகளில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவம் தகவல்கள் வெளியாகிவுள்ளன. மெரினா கடற்கரையில் மட்டும் 300மி.மீ அளவிற்க்கு மழை பெய்துள்ளது. இதனால் மெரினா முழுவதும் இரண்டு கடலாக காட்சியளிக்கின்றது.

chennai flood

மக்கள் அனைவரும் அந்த தண்ணீரில் விளையாடி கொண்டு வருகின்றனர். மக்களின் வருகை அதிகரிப்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tagged with:     , , , ,