நைஜிரியாவில் மைடுகிரியில் தற்கொலைப்படையினர் இரட்டை குண்டு வெடிப்பு சமபவத்தை நடத்தியுள்ளனர். அந்த சம்பவத்தில் 13 பேர் பலியாகிவுள்ளனர் மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். போகோ ஹராம் கிளிர்ச்சியாளர்களாக சந்தேகிக்கப்படும் மூன்று தற்கொலைப்படையினர் இச்சம்பவத்தை பல்வேறு இடங்களில் இரட்டை குண்டுகளை வெடிக்க செய்தனர்.
இதில் சம்பவ இடத்திலேயே 13பேர் உயிர் இழந்துள்ளனர் மேலும் பலரும் காயமடைந்து மீட்ப்பு குழுவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்டனர். அனுமதிக்கப்பட்ட பலரின் நிலமை மோசமாகவுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். முதல் குண்டு வெடிப்பு சம்பவத்தை மூனா கேரேஜ் பேருந்து நிலையத்தில் நடத்தியுள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.